• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புனேவிற்கு மாற்றபட்ட ஐபிஎல் போட்டி நடக்குமா புதிய சிக்கல்

April 13, 2018 தண்டோரா குழு

சென்னையில் இருந்து புனேவுக்கு மாற்றப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

2018ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த 7ம் தேதி மும்பையில் துவங்கியது.தமிழகத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தனர்.இதனால்,சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியின் போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும்,ஸ்டேடியத்திற்கு வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.போட்டி துவங்க சுமார் 4 மணி நேரம் இருந்த நிலையில்,அண்ணாசாலையில் அரசியல் கட்சியினர்,தமிழ் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர்.

இதற்கிடையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு தர போலீசார் மறுத்ததால்,வேறு இடத்திற்கு மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்தது.இதையடுத்து சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவிற்கு மாற்றபட்டது.

இந்நிலையில், மக்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ள புனேவில் கிரிக்கெட் மைதானத்திற்கு எப்படி தண்ணீர் வழக்க முடியும் என மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இதனால் புனேவில் ஐபிஎல் போட்டி நடக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மேலும் படிக்க