• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடடா… என்ன மாதிரியான நாட்டில் நாம் வாழ்கிறோம் வெட்கமாக இருக்கிறது – நடிகை வரலட்சுமி

April 13, 2018 தண்டோரா குழு

சிறுமி ஆசிபா படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகை வரலட்சுமி அடடா… என்ன மாதிரியான நாட்டில் நாம் வாழ்கிறோம் வெட்கமாக இருக்கிறது என டுவீட் செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவதிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.பலரும் ‘ஜஸ்டிஸ் பார் ஆசிஃபா’ #JusticeForAsifa என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில்,

ஒரு அப்பாவி ஆத்மாவை சிதைத்து படுகொலை செய்திருக்கிறார்கள்.வெட்கமாக இருக்கிறது. குற்றவாளியை பாதுகாக்கின்றனர் அவனை காக்க போராடுகின்றனர்.இந்த மனிதனை காக்க சட்டமா? அடடா… என்ன மாதிரியான நாட்டில் நாம் வாழ்கிறோம்!!! என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க