April 12, 2018
தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் தமிழகம் வரும் மோடியை கண்டித்தும் கோவையில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி இன்று(ஏப் 12)போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ராணுவ கண்காட்சியில் கலந்து கொள்ள தமிழகம் வந்துள்ள மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உள்ள ராமநாதபுரம்,பீளமேடு, கணபதி,குனியமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும்,திமுக அலுவலகம், மற்றும் எம்எல்ஏ, மாவட்ட பொறுப்பாளர்கள், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள்,திமுகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்து உள்ளனர். குறிப்பாக வீடுகளில் கருப்பு கொடி கட்டியவர்களை காவல் துறையினர் கழற்ற வலியுறுத்தி நிர்பந்தம் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,திமுகவினர் சிலரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு காவல் துறையினர் அழைத்து சென்றனர்.