• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொத்தடிமைகளாக தவித்து வரும் குடும்பம்

April 11, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தில் ஒரு குடும்பம் கொத்தடிமைகளாக மாட்டி தவித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்.இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் அவசர தேவைக்காக அட்வான்ஸ் வாங்கிகொண்டு ஸ்பின்னிங் மில்லில் பணியில் இணைந்தனர்.கணவன் மனைவி இருவரும் கடந்த ஐந்து மாதமாக ஸ்பின்னிங் மில் முதலாளி அப்பாஸிடம் வேலை செய்து வருகின்றனர்.

ஆனால்,கடந்த ஒரு மாதமாக மில் முதலாளி அப்பாஸ் மகாலிங்கத்திடம் பணம் திரும்ப கேட்டு கடுமையாக நடந்து வருகிறார்.இதனால் மகாலிங்கம் நாங்கள் இந்த இடத்தில் இருந்து வேறு பக்கம் வேலைக்கு செல்கிறோம்.இந்த ஊரிலேயே உள்ள வேறு இடத்தில் வேலை செய்து உங்கள் பணத்தை கொடுத்துவிடுகிறோம் எனக் கூறியிள்ளார்.இதனால் இன்னும் கோவம் அடைந்த முதலாளி அப்பாஸ் நீங்கள் எங்கு வேணாலும் போங்கள் ஆனால் உங்கள் குழந்தைகளை பணம் கொடுக்கும் வரை வெளியில் விடமாட்டேன் என மறுத்துள்ளனர்.

இதனால்,மகாலிங்கம் மற்றும் அவரது மனைவி இவரது குழந்தைகள் கடந்த ஒரு சில மாதங்களாக இவர்கள் பணிபுரியும் ஸ்பின்னிங் மில் முதலாளி அப்பாஸிடம் குடும்பத்தோடு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க