April 11, 2018
தண்டோரா குழு
சென்னை திருவிடந்தையில் நடைபெற்று வரும் ராணுவ தளவாட கண்காட்சியை கிரிக்கெட் வீரர் தோனி பார்வையிட்டார்.
சென்னை அருகே, திருவிடந்தையில் முதல் முறையாக ராணுவ கண்காட்சி இன்று துவங்கியது. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள்,போர் விமானம் மற்றும் ஏவுகணைகள் இடம்பெற்றுள்ளன.நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டார்.நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார்.இக்கண்காட்சியில் பொதுத்துறை மற்றும் தனியாரை சேர்ந்த நிறுவனங்களின் ராணுவ தளவாடங்கள் உள்ளன.அதைபோல் டிஆர்டிஓ, எச்ஏஎல்,பெல் ஆகியவற்றின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டியில் விளையாட வந்த கிரிக்கெட் வீரர் தோனி சென்னை திருவிடந்தையில் நடைபெற்றுவரும் ராணுவ தளவாட கண்காட்சியை இன்று பார்வையிட்டார்.