• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் – ரஜினி

April 11, 2018 தண்டோரா குழு

காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி நடக்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு கிளம்பியது.சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடும் போராட்டம் நடைபெற்றது.இருப்பினும் தடைகளை மீறி நேற்று சென்னையில் ஐபிஎல் நடைபெற்றது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் விளையாட்டு மைதானத்தை போராட்டக்களமாக மாற்றினர்.

அப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தத் தடியடி நடத்தப்பட்டது.இந்தச் சம்பத்தில், இளைஞர் ஒருவர் காவலரை கடுமையாகத் தாக்கியுள்ளார்.இது தொடர்பான வீடியோ காட்சியை பார்த்த ரஜினிகாந்த்,இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க