• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சேப்பாக்கம் மைதானத்தில் காலணி மற்றும் கொடியை ரசிகர்கள் வீசியதால் பதற்றம்

April 10, 2018 தண்டோரா குழு

ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் காலணி, கொடிகள் வீசியதால் பதற்றம்; 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று சேப்பாக்கம் நடக்கவிருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புக்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் மாபெரும் போராட்டங்கள் நடத்தினர்.பின்னர் அனைவரும் கைது செய்யபட்டு போட்டி துவங்கியது. தற்போது கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில், போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் சிலர் காலணி, கொடிகள் வீசியதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து, உடனடியாக போலீசார் அவர்கைளை வெளியேற்றினர். சென்னை அணி வீரர் முரளி விஜய், ஜடேஜாவை நோக்கி காலணி வீசீயதால் சிறுது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து காலணி வீசியதாக போலீசார் 8 பேரை கைது செய்தனர்.

மேலும் படிக்க