• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேப்பாக்கம் மைதானத்தில் காலணி மற்றும் கொடியை ரசிகர்கள் வீசியதால் பதற்றம்

April 10, 2018 தண்டோரா குழு

ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் காலணி, கொடிகள் வீசியதால் பதற்றம்; 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று சேப்பாக்கம் நடக்கவிருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புக்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் மாபெரும் போராட்டங்கள் நடத்தினர்.பின்னர் அனைவரும் கைது செய்யபட்டு போட்டி துவங்கியது. தற்போது கொல்கத்தா அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில், போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் சிலர் காலணி, கொடிகள் வீசியதால் பதற்றம் நிலவியது. இதையடுத்து, உடனடியாக போலீசார் அவர்கைளை வெளியேற்றினர். சென்னை அணி வீரர் முரளி விஜய், ஜடேஜாவை நோக்கி காலணி வீசீயதால் சிறுது நேரம் போட்டி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து காலணி வீசியதாக போலீசார் 8 பேரை கைது செய்தனர்.

மேலும் படிக்க