• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணம்

April 7, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபயணத்தை தொடங்குகிறார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,

திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து தொடங்கவுள்ள காவிரி மீட்பு நடை பயணத்தை திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி தொடங்கி வைக்கவுள்ளார். காவிரி உரிமை மீட்புப் பயணம் முக்கொம்பில் இருந்து முதல் குழுவும், 9-ம் தேதி அரியலூரில் இருந்து 2-வது குழுவும் பயணம் தொடங்கவுள்ளது.

மேலும்,காவிரி உரிமை மீட்புப் பயணத்தில்,வாரியம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்களிடம் அஞ்சல் அட்டையில் கையெழுத்து பெற்று,குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம்.காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் இறுதியில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.காவிரிக்காக நடைபெறும் இந்த மீட்பு பயணம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றார்.

மேலும் படிக்க