April 6, 2018
தண்டோரா குழு
முதுகெலும்பு அரிக்கப்பட்ட உலகின் நான்காவது நபருக்கு கோவையில் வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.
ஈராக் நாட்டை சேர்ந்த நபருக்கு நாடாப் புழுவால் நடை இழந்த நிலையில்,அவருக்கு கோவையை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் அவருக்கு மறுவாழ்வு அளித்து உள்ளனர்.உலகில் முதுகெலும்பு அரிப்பால் பாதிக்கப்பட்டவருக்கு இந்தியாவில் முதல் முறையாக கோவையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
ஈராக் நாட்டை சேர்ந்த இப்ராஹின் முத்தர் என்பவர் ஹைடாடிட் என்னும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நோய் நாய்,ஆடு,பன்றி போன்ற விலங்குகளின் உடலில் இருக்கும் நாடாப்புழுக்கள் கல்விகோல் வழியே வெளியேறி மனித உடலுக்குள் சென்று நுரையீரல் , ஈரல் முதுகெலும்பு, ஆகிய இடங்களில் தங்கி வளர ஆரம்பித்து அது கட்டியாக மாறுகிறது.
இத்தகைய நோயினால் கடந்த பத்து ஆண்டுகளாக அவதிப்பட்ட அவர், ஈராக்கில் சிகிச்சை மேற்கொண்டு உள்ளார்.ஆனால் கால்கள் பலமிழந்து கடந்த ஆறு மாதங்களாக நடக்க முடியாமல் இருந்துள்ளார்.ஈராக் மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் கோவை ஆர் எஸ் புரம் பகுதியல் உள்ள தனியார் ஆர்த்தோ மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று உள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உலகில் நான்காவது நபராக முதுகெலும்பு அரிப்பால் பாதிக்கப்பட்டவர் இவர் என தெரிவித்து உள்ளனர்.இதனையடுத்து அவருக்கு ஆறு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து உள்ளனர்.தற்போது அவர் முழுமையாக குணமடைந்து தானாகவே நடந்து செல்வதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.இந்த நோய்க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் இந்த சிகிச்சை செய்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.