April 6, 2018
தண்டோரா குழு
தனி ஒரு ஆளாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று திமுக மற்றும் தோழமை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது, வேலூர் மாவட்டத்தில் ஒற்றை ஆளாக ஓடும் பேருந்தை இயக்க கூடாது என்று கையில் திமுக கொடியுடன் பெண் ஒருவர் பேருந்தை தடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.பின்னர் அவர் திமுகவை சேர்ந்த தெய்வநாயகி என்பது தெரியவந்தது.
இந்நிலையில், மறியல் செய்த திமுக கழகத்தைச் சார்ந்த தெய்வநாயகியை இன்று நேரில் சந்தித்து ஸ்டாலின் தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.