• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு

April 5, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தொழில் நகரான கோவை மாவட்டத்தில் இன்று(ஏப் 5)கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம்  நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக தொழில் நகரான கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் பல நூறு கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,அரசு பேருந்துகள் 9௦% வரை இயக்கப்பட்டு வருகிறது.எனினும் வழக்கமாக கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அரசுப் பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வரும் சூழலில் இன்று 20% அளவிற்கு மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதால் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.பாதுகாப்பு கருதி கோவையில் இருந்து கர்நாடகா செல்லும் 52 பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மேலும் படிக்க