• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால் திருநங்கை குழந்தை பிறக்கும் – கேரள பேராசிரியரின் சர்ச்சை பேச்சு

April 4, 2018 தண்டோரா குழு

ஒரு பெண், ஆண் போல உடை அணிந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை திருநங்கை குணம் கொண்டதாகவே இருக்கும் என கேரள பேராசிரியர் ஒருவர் கூறியுள்ள கருத்து சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கல்லடியில் உள்ள பிரபல கல்லூரியில் ரஜித்குமார் என்பவர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.சமீபத்தில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து பேசிய அவர்,ஒரு பெண்,ஆண் போல உடை அணிந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தை திருநங்கை குணம் கொண்டதாகவே இருக்கும்.

கேரளாவில் ஏற்கனவே 6 லட்சம் திருநங்கைகள் உள்ளனர்.இப்போது இங்கு உள்ள பெண்கள் எல்லாம் ஜீன்ஸ் உடை அணிந்தால் திருநங்கை குணமுடைய குழந்தைகள் தான் பிறக்கும்.இது போன்ற பெண்களுக்கு ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்பு உள்ளது என்று பேசியுள்ளார்.

இந்நிலையில், இவரது பேச்சுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  பேராசிரியரின் பேச்சுக்கு கேரள திருநங்கைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க