April 4, 2018
தண்டோரா குழு
சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 10 ம் தேதி திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டி நடைபெறும் என தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள்,அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின் சென்னை அணி ஐபிஎலில் விளையாடவுள்ளதால் சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்.10ல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணிகள் விளையாடவுள்ளன. இப்போட்டி நடைபெற கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 10 ம் தேதி திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டிநடைபெறும் என தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.