• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னையில் ஐ.பி.எல் போட்டி நடக்கும் – தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம்

April 4, 2018 தண்டோரா குழு

சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 10 ம் தேதி திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டி நடைபெறும் என தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள்,அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், வரும் 7-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் எதிர் கொள்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பின் சென்னை அணி ஐபிஎலில் விளையாடவுள்ளதால் சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்.10ல்  சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணிகள் விளையாடவுள்ளன. இப்போட்டி நடைபெற கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் ஏப்ரல் 10 ம் தேதி திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டிநடைபெறும் என தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க