• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம்

April 4, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் கோவை வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசை கண்டித்து நீதிமன்ற வளாகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது,நீதிமன்ற வளாகத்தில் இருந்த இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் விளம்பர பதாகையில் இருந்த இந்தி எழுத்துக்களை கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.நீதிமன்றத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஊர்வலமாக சென்று பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும்,வருகின்ற 7 ம் தேதி வரை தொடர்ந்து நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பு நடத்துவது என்றும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்றும் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க