• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாய் கண்முன்னே மகனை கட்டி வைத்து அடித்த போக்குவரத்து காவலர்கள்

April 3, 2018 தண்டோரா குழு

தாய் கண்முன்னே மகனை போக்குவரத்து காவலர்கள் கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னையில் உள்ள துணிக்கடையில் இருந்து பிரகாஷ் என்கிற வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்தில் தனது தாய் மற்றும் தங்கையோடு சென்றுள்ளார்.மூன்று பேர் ஒரே வாகனத்தில் சென்றதாலும்,ஹெல்மெட் போடாததாலும் அவரை போலீசார் மடக்கிப் பிடித்து சட்டையை பிடித்து இழுத்து சென்றுள்ளனர்.அப்போது, என் மகனை விடுங்கள் என பிரகாஷின் தாய் ஆய்வாளரை தடுக்க, அவரை ஆய்வாளர் தாக்கியுள்ளார்.

தாயை தாக்கியதால் கோபமடைந்த பிரகாஷ் உதவி ஆய்வாளரின் சட்டையை பிடித்துள்ளார்.இதில்,உதவி ஆய்வாளரின் தோளில் இருந்த ஸ்டார் உடைந்து கீழே விழுந்துள்ளது.இதனால் ஆத்திரமடைந்த ஆய்வாளர் மற்றும், இரு உதவி ஆய்வாளர்கள் என மூவரும் சேர்ந்து பிரகாஷை கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.மேலும்,அவரின் கையை உடைக்க அவர்கள் முயற்சி செய்வதும், அதைக்கண்டு அவரது தாய் அலறி துடிப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க