• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் ஆனது தொடர்பாக 9 சிறுவர்கள் கைது

March 31, 2018 தண்டோரா குழு

சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் ஆனது தொடர்பாக 9 சிறுவர்கள் மற்றும் பயிற்சி மைய உரிமையாளர் உள்பட 12 பேர் ஜார்க்கண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடங்கியது. இதற்கிடையில்,தலைநகர் டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் ஒரு சில பாடங்களுக்கான வினாத்தாள்கள் இணையதளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழும்பியது.இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல 10ம் வகுப்பு கணித பாட வினாத்தாளும் வட மாநிலங்களில் வெளியானதாக கூறப்பட்டது.இதனையடுத்து,இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியிருந்தார்.

இந்நிலையில்,சிபிஎஸ்இ வினாத்தாள் லீக் ஆனது தொடர்பாக 9 சிறுவர்கள் மற்றும் பயிற்சி மைய உரிமையாளர் உள்பட 12 பேர் ஜார்க்கண்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க