• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வைகோ கண்முன் மதிமுக தொண்டர் தீக்குளிப்பு

March 31, 2018 தண்டோரா குழு

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நடத்திய  நடைபயணத்தில்  மதிமுக தொண்டர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதுரையில் நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது, நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளித்து மேடையை நோக்கி ஓடி வந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்ததை அடுத்து மேடையில் கண்ணீர் விட்டு கதறிய வைகோ, அந்த தொண்டரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதியுங்கள். இயற்கை அன்னை அந்த தொண்டரை எபப்டியாவது காப்பாற்றி தரவேண்டும்.தீக்குளிக்க வேண்டாம் என ஏற்கனவே நான் தொண்டர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன் எனக் கூறினார்.இதைதொடர்ந்து, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ தனது நடைபயணத்தை தொடங்கினார்.

மேலும் படிக்க