• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு அதிநவீன பேருந்து இயக்கம்

March 30, 2018 தண்டோரா குழு

பல்வேறு நவீன வசதிகளுடன் கோவையில் இருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு கர்நாடக அரசின் பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து பெங்களூருவிற்கு முதல் முறையாக நவீன வசதிகளுடன் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.இந்த பேருந்தில் கழிப்பறை வசதி மற்றும் பயணிகளுக்காக WIFI வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த பேருந்து கோவையில் இருந்து மதியம் 12மணிக்கு புறப்பட்டு இரவு 8 எட்டு மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தை சென்றடைகிறது.

மீண்டும் பெங்களூரு விமான நிலையத்த்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட்டு  காலை 10.45 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்த பேருந்தில் பயணம் செய்ய 1100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கபடுகிறது.தொழில் நகரான கோவையில் பெங்களூருவிற்கு அதிகளவிலான ரயில்களும் இயக்கபடாத  நிலையில் தற்போது நவீன வசதிகளுடன் பெங்களூருவிற்கு பேருந்து சேவை அறிமுகப்படுத்தி உள்ளது வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

மேலும் படிக்க