• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் – கவிஞர் வைரமுத்து

March 29, 2018 தண்டோரா குழு

வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் என காவிரி விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது.எனினும், இதுவரை வாரியம் அமைக்கபடவில்லை.இதனை தொடர்ந்து தமிழக எம்பிக்களும் நாடாளுமன்றத்தை முடக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உச்ச நீதிமன்றம் வழங்கிய கெடு இன்றுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,உச்ச நீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது.மத்திய அரசோ கிழிந்த வேட்டியையும் பறிக்கப் பார்க்கிறது.உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க