• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு கௌதம் மேனன் விளக்கம்

March 29, 2018 தண்டோரா குழு

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், கெளதம் மேனன் மீது நேற்று குற்றசாட்டு வைத்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து கௌதம் மேனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

அதில்,

நரகாசுரன் படத்திற்கு கார்த்திக் நரேனுக்கு தேவையான அனைத்தையும் நானும் என் குழுவும் செய்து கொடுத்தோம். இப்படத்தில் நான் எந்த விதத்திலும் பங்குதாரர் இல்லை. கார்த்திக் நரேனுக்கு நான் இந்த படத்தை விட்டு வெளியேற வேண்டுமானால் அதை நான் முழு மனதோடு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக, துருவநட்சத்திரம் மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா படங்களின் படப்பிடிப்பு முடியவில்லை. அது முடிந்த பிறகு இவ்வருடத்திற்குள் வெளியிடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதற்கு நான் ஒரு வழிகாட்டியாகவே இருந்தேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், கார்த்திக் நரேனுடனான கருத்து வேறுபாடு சரிசெய்யப்பட்டதாகவும், படத்தின் வெளியீட்டை நோக்கி வேலைகள் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க