• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா வருகிறார் உலகில் நம்பர் 1 இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்

March 23, 2018 தண்டோரா குழு

இன்சப்ஷென், மெமன்ட்டோ, தி பிரஸ்டீஜ், பேட்மேன் பிகின்ஸ், இந்த ஆண்டு ஆஸ்கரில் 3 விருதுகளை வென்ற டன்கிர்க் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன்.

உலகில் நம்பர் ஒன் இயக்குனராக கருதப்படும் இவர் முதல் முறையாக் இந்தியா வரவுள்ளார்.மும்பை டாடா தியேட்டரில் மார்ச் 31ம் தேதி  நடக்கும் டிஜிட்டல் சினிமாவின் எதிர்காலம் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முக்கிய இயக்குனர்கள், நடிகர்கள் கிறிஸ்டோபர் நோலனுடன் கலந்துரையாடல் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

இதில் நோலனுடன் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ஆமிர்கான், ஷாருக்கான், இயக்குனர்கள் ஷியாம் பெனகல், மணிரத்னம், அனுராக் கஷ்யப், பர்ஹான் அக்தர் உள்பட பலர்பங்கேற்கிறார்கள். அவர்களுடன் நோலன் கலந்துரையாடி கேள்விகளும் கேட்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க