March 22, 2018
தண்டோரா குழு
தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்துதர முடியாதா? இது இயலாமை அல்லஇழிவான அரசியல் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையிலும் காவிரி மேலாண்மை அமைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைபோல் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வாளகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மைய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதிநீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்துதர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் எனக் கூறியுள்ளார்.