• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்துதர முடியாதா? மத்திய அரசுக்கு கமல் கேள்வி

March 22, 2018 தண்டோரா குழு

தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்துதர முடியாதா? இது இயலாமை அல்லஇழிவான அரசியல் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையிலும் காவிரி மேலாண்மை அமைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைபோல் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வாளகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மைய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,     

பாகிஸ்தானோடு, வங்கதேசத்தோடு நதிநீரைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியா, தன் நாட்டுக்குள் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் காவிரி நீரைப் பகிர்ந்துதர முடியாதா? இது இயலாமை அல்ல; இழிவான அரசியல் . கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க