• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நரிக்குறவர் மக்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

March 22, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட நரிகுறவர்கள்,நரிக்குறவர் மக்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி இன்று(மார்ச் 22) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்யும் நரிகுறவர் மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன் அவர்களை போலீசார் சாலைகளில் வியாபாரம் செய்யக்கூடாது என மிரட்டுவதாகவும்,தாங்கள் வசித்து வந்த பகுதியில் இருந்து உடனடியாக காலி செய்ய வலியுறுத்தி போலீசார் மிரட்டுவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாட்டையால் அடித்தும் கைகளை பிளேடால் கீறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மேலும்,கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது தங்களை வணிக  வளாகங்களில்  வியாபாரம் செய்ய அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நரிகுறவர் மக்களை,பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்,மத்திய அரசு அறிவித்த இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்,வேலை வாய்ப்புகளில்  முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும் படிக்க