• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் – உயர்நீதிமன்றம்

March 22, 2018 தண்டோரா குழு

புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது

புதுச்சேரியில் மாநில அரசை கலந்தாலோசிக்காமல் பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன்,சங்கர்,செல்வகணபதி ஆகிய மூன்று பேரை எம்.எல்.ஏ.க்களாக உள்துறை அமைச்சகம் நியமனம் செய்தது.இந்நிலையில் இவர்கள் மூன்று பேர் நியமனத்திற்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லக்ஷ்மி நாராயணன் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில்,இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டே எம்எல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் சாமிநாதன்,சங்கர்,செல்வகணபதி ஆகியோரை நியமித்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும்,உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் வழக்கை சந்திக்கத் தயார் என்று பாஜக நியமன எம்எல்ஏ சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க