• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான விசாரணை மார்ச் 22ல் தொடக்கம்

March 20, 2018 தண்டோரா குழு

குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பாக அதுல்ய மிஸ்ரா வரும் 22-ஆம் தேதி விசாரணையைத் தொடங்குகிறார்.

குரங்கணி தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார்.

குரங்கணி தீ விபத்து தொடர்பாக 2 மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அதுல்ய மிஸ்ராவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும்,இது போன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் நடக்காமல் இருக்க தேவையான பரிந்துரைகள் அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான விசாரணையை அதுல்ய மிஸ்ரா மார்ச் 22-ல் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க