• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரத யாத்திரைக்கு அனுமதியளித்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் கைது

March 20, 2018 தண்டோரா குழு

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நடத்தப்படும் ரத யாத்திரைக்கு அனுமதியளித்ததை கண்டித்து கோவையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

அயோத்தியில் ராமர் கோவில் அமைக்க வலியுறுத்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நாடு தழுவிய ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.ஆறு மாநிலங்களை கடந்து இன்று காலை கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் வந்துள்ளது.இந்த நிலையில் ரத யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது 50 க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கிம் எதிராக கோஷங்கள் எழுப்பியபடியே உக்கடம் பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.இதையடுத்து கவல்துறையினர் அவர்களை கைது செய்ய முற்பட்டபோது இருதரப்பினர் இடையே லேசான தள்ளுமுல்லு ஏற்பட்டது.இதனைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க