• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜாவின் புதிய படம்

February 19, 2018 தண்டோரா குழு

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதியதோடு மட்டுமில்லாமல் அதை தனித்தன்மையான குரலில் பாடி பட்டி தொட்டியெங்கும் உள்ள ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றார் அருண்ராஜா காமராஜ்.அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பைரவா’ படத்தில் இடம்பெற்ற ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’வும் அவருடைய ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்தது.

பாடல் எழுதுவது, பாடுவதோடு மட்டும் நின்று விடாமல் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘மரகத நாணயம்’ படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

முதல்முறையாக தனது நண்பருக்காக தனது சொந்த நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

 

மேலும் படிக்க