• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

27 வருடங்களுக்கு பிறகு இணையும் பாலசுப்ரமணியம், யேசுதாஸ்

February 7, 2018 tamilsamayam.com

முன்னனி பாடகர்களாக திகழ்ந்த பாலசுப்ரமணியம், யேசுதாஸ் இருவரும் 27 வருடங்களுக்கு பின்னர் இணைந்து பாடலை பாட உ ள்ளனர்.

27 வருடங்களுக்கு முன்னர் வெளியான ‘தளபதி’ படத்தில் ‘காட்டுக் குயிலே மனசுக்குள்ளே’ பாடலை பாலசுப்ரமணியம், யேசுதாஸ் இருவரும் இணைந்து பாடியிருந்தனர். இளையராஜா இசையில் வெளியாகியிருந்த இந்த பாடல் மிகவும் பிரபலமானது.

இந்நிலையில் இருவரும் தனித்தனியாக பல பாடல்களை பாடிவந்தனர். ஒரே துறையில் இருந்தாலும் ஒன்றாக பாடும் வாய்ப்பு தற்போது தான் மீண்டும் கிடைத்துள்ளது.

தற்போது எம்.ஏ. நவ்சத் இயக்கத்தில் தமிழில் ‘கேணி’, மலையாளத்தில் ‘கிணறு’ என உருவாகி வரும் படத்தில் பாலசுப்ரமணியம், யேசுதாஸ் ஆகியோர் இணைந்து பாட உள்ளனர்.

கேரளா, தமிழ்நாடு இடையே தண்ணீர் பிரச்னை உள்ள நிலையில், இந்த படம் தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க