• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காரை விட்டு இறங்கி ரசிகர்களை திட்டிய சூர்யா

January 19, 2018 தண்டோரா குழு

நடிகர் சூர்யா சிறந்த பண்புகளையும், அதிக பொறுமையையும் கொண்டவர்.இந்நிலையில் முதன்முறையாக தன்னுடைய பொறுமையை இழந்து நடிகர் சூர்யா ஆந்திராவில் நடுரோட்டில் இறங்கி ரசிகர்களிடம் கோபம் கொண்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் உருவான தானா சேர்ந்த கூட்டம் படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. அப்படம் வெளியான பிறகு சூர்யா ஆந்திரா முழுவதும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

அப்போது சூர்யா காரை பின் தொடர்ந்து வந்த ரசிகர்கள் மோசமாகவண்டி ஓட்டியுள்ளனர், அதுவும் ஹெல்மெட் இல்லாமல்,இதனைப் பார்த்த சூர்யா கோபமடைந்து ரோட்டில் இறங்கி ரசிகர்களை திட்டியுள்ளார்.தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க