• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜோதிகா, பாலா மீது மேலும் ஒரு வழக்கு!

November 27, 2017 தண்டோரா குழு

நாச்சியார் டீசரில் கெட்டவார்த்தை பேசியது தொடர்பாக ஜோதிகா, பாலா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலா, இயக்கி தயாரிக்கும் படமான நாச்சியார் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஜோதிகா டீசரின் முடிவில் கெட்டவார்த்தை பேசியிருப்பார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, ஜோதிகா மற்றும் பாலா மீது கோவை, மேட்டுபாளையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஜோதிகா மற்றும் பாலா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

மேலும் படிக்க