• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி ’பார்ட்-3’ எடுக்க ராஜமௌலி திட்டமா?

November 20, 2017 tamilsamayam.com

பாகுபலி படத்துக்கு பின் ராஜமௌலி இயக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி, பாகுபலி 2 படங்களை தொடர்ந்து ராஜமௌலியின் அடுத்த படம் என்ன என்று தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தார். இவர் ராம்சரணை வைத்து 2019ல் படம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

தவிர, வேறு ஒரு படம் பண்ண இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தற்போது இவரின் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் எழுதியிருக்கும் புதிய கதையின் படப்பிடிப்பை வரும் ஜனவரி (2018) தொடங்க உள்ளார்.

டபுள் ஹீரோ படமாக இது உருவாக உள்ளது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் தயாராகும். இந்த படத்தில் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளனர். கன்னட நடிகர் சுதீப்பும் இதில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இது பாகுபலி ‘பார்ட் -3’ என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க