• Download mobile app
06 May 2025, TuesdayEdition - 3373
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கவுதம் மேனனை ஆச்சரியப்பட வைத்த கார்த்திக் நரேன்

November 14, 2017 தண்டோரா குழு

துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படம் நரகாசூரன். கவுதம் மேனன் தயாரிக்கும் இப்படம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஊட்டியில் தொடங்கப்பட்டது.

‘துருவங்கள் பதினாறு’ படத்தை போலவே இப்படமும் ஊட்டி பின்னணியில் இப்படத்தையும் உருவாக்கி வருகிறார் கார்த்திக் நரேன். துவக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஆத்மிகா இருவருடைய காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டது.

அதன்பின் ‘நரகாசூரன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று வந்தது. இதில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நவம்பர் 14-ம் தேதி ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் கார்த்திக் நரேன்.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“41 நாட்களில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவு. அருமையான பணி கார்த்திக் நரேன். தயாரிப்பாளராக இருப்பதில் கூடுதல் சாதகம் இருக்கிறது. படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள்.

மேலும் படிக்க