• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவுதம் மேனனை ஆச்சரியப்பட வைத்த கார்த்திக் நரேன்

November 14, 2017 தண்டோரா குழு

துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படம் நரகாசூரன். கவுதம் மேனன் தயாரிக்கும் இப்படம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி ஊட்டியில் தொடங்கப்பட்டது.

‘துருவங்கள் பதினாறு’ படத்தை போலவே இப்படமும் ஊட்டி பின்னணியில் இப்படத்தையும் உருவாக்கி வருகிறார் கார்த்திக் நரேன். துவக்கத்தில் சந்தீப் கிஷன் மற்றும் ஆத்மிகா இருவருடைய காட்சிகள் முழுமையாக படமாக்கப்பட்டது.

அதன்பின் ‘நரகாசூரன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்று வந்தது. இதில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நவம்பர் 14-ம் தேதி ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டார் கார்த்திக் நரேன்.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“41 நாட்களில் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவு. அருமையான பணி கார்த்திக் நரேன். தயாரிப்பாளராக இருப்பதில் கூடுதல் சாதகம் இருக்கிறது. படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படத்தை உருவாக்கவுள்ளார்கள்.

மேலும் படிக்க