• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை பிரபல பாடகி ஜானிகியின் கடைசி இசை நிகழ்ச்சி!

October 27, 2017 tamilsamayam.com

இனி சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பாடப்போவதில்லை என்று பிரபல பாடகி ஜானகி அறிவித்தநிலையில், அவருடைய இறுதி இசை நிகழ்ச்சி நாளை மைசூரில் நடைபெறவுள்ளது.

வரும் 28-ந்தேதி முதல் சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பாட போவதில்லை என்றும் ஓய்வு எடுக்க போவதாகவும் எஸ். ஜானகி மலையாள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மைசூரில் உள்ள ஒரு அறக்கட்டளையின் சார்பில் ஜானிகியின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நிகழ்ச்சியாளர்கள் தரப்பில் கூறும் போது, ஜானகி ஒய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் என்றும் இருந்தபோதிலும், நாங்கள் மீண்டும் மீண்டும் அவரிடம் கோரிக்கை வைத்தன் பேரில், இந்த இசை நிகழ்ச்சிக்கு சம்மதம் தெரிவி்த்தாகவும் தொடர்ந்து பேசிய அவர்கள், இது தான ஜானகியின் கடைசி இசை நிகழ்ச்சி என்றும் இதன் பின்னர், ஏற்கனவே அவர் கூறியது போல ஒய்வு பெறுவார் என்றும் தெரிவித்தனர்.

இந்த இசை நிகழ்ச்சியில், நடிகர்கள் சிவராஜ் குமார், பி சரோஜா தேவி, இசையமைப்பாளரகள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.

மேலும் படிக்க