• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன் படங்களை ‘காப்பி’ என்று கூறியவர்களுக்கு அட்லீ பதிலடி

October 3, 2017 தண்டோரா குழு

இயக்குநர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ, ‘ராஜா ராணி’, ‘தெறி’ போன்ற வெற்றி படங்களை அளித்தவர்.இவர் தற்போது விஜய்யின் ‘மெர்சல்’ படத்தினை இயக்கி வருகிறார்.எனினும், இவரது படங்களான ‘ராஜா ராணி’ ‘மௌனராகம்’ படத்தின் காப்பி, என்றும் ‘தெறி’ ‘சத்ரியன்’ படத்தின் காப்பி என்றும் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அட்லீ ஓர் பேட்டியளித்துள்ளார்.அதில் “இசையில் மொத்தமே 7 ஸ்வரங்கள் தான் உள்ளது, அதில் தான் மாற்றி மாற்றி இசையமைக்க முடியும். இன்னும் பல வருடம் கழித்து ஏதாவது ஒரு பாடலை கேட்டால் கூட அதில் ராஜா சார், ரகுமான் சாரின் சாயல் இருக்கும்” என்று கூறினார்.

மேலும்,”காப்பி அடிக்கின்றேன் என்று சொல்வது எளிது, ஆனால், அந்த படத்திற்காக நான் எத்தனை கஷ்டப்படுகின்றேன், ஒரு விஷயத்தை இந்த ட்ரெண்டிற்கு ஏற்றவாறு எப்படி எடுக்கின்றோம் என்பதில் ரிஸ்க் அதிகம். நானும் எல்லோர் போலவும் உதவி இயக்குனராக இருந்து கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்” என்று பேசியுள்ளார்.

மேலும் படிக்க