• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன் படங்களை ‘காப்பி’ என்று கூறியவர்களுக்கு அட்லீ பதிலடி

October 3, 2017 தண்டோரா குழு

இயக்குநர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ, ‘ராஜா ராணி’, ‘தெறி’ போன்ற வெற்றி படங்களை அளித்தவர்.இவர் தற்போது விஜய்யின் ‘மெர்சல்’ படத்தினை இயக்கி வருகிறார்.எனினும், இவரது படங்களான ‘ராஜா ராணி’ ‘மௌனராகம்’ படத்தின் காப்பி, என்றும் ‘தெறி’ ‘சத்ரியன்’ படத்தின் காப்பி என்றும் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அட்லீ ஓர் பேட்டியளித்துள்ளார்.அதில் “இசையில் மொத்தமே 7 ஸ்வரங்கள் தான் உள்ளது, அதில் தான் மாற்றி மாற்றி இசையமைக்க முடியும். இன்னும் பல வருடம் கழித்து ஏதாவது ஒரு பாடலை கேட்டால் கூட அதில் ராஜா சார், ரகுமான் சாரின் சாயல் இருக்கும்” என்று கூறினார்.

மேலும்,”காப்பி அடிக்கின்றேன் என்று சொல்வது எளிது, ஆனால், அந்த படத்திற்காக நான் எத்தனை கஷ்டப்படுகின்றேன், ஒரு விஷயத்தை இந்த ட்ரெண்டிற்கு ஏற்றவாறு எப்படி எடுக்கின்றோம் என்பதில் ரிஸ்க் அதிகம். நானும் எல்லோர் போலவும் உதவி இயக்குனராக இருந்து கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்” என்று பேசியுள்ளார்.

மேலும் படிக்க