• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஷால், கார்த்தி, நாசர் மீது வழக்கு பதிவு செய்யலாம் – சென்னை உயர்நீதிமன்றம்

September 23, 2017 தண்டோரா குழு

நடிகர்கள் விஷால்,கார்த்தி,நாசர் ஆகியோர் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த பணம் பெற்று தனியார் டிவிக்கு அனுமதி வழங்கி, விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் கையாடல் செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சங்க உறுப்பினர் வராகி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இம்மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,இதனை விசாரித்த நீதிமன்றம் புகார் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், முகாந்திரம் இருந்தால் நடிகர்கள் விஷால்,கார்த்தி,நாசர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

மேலும் படிக்க