• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் அற்புதம்மாள் கோரிக்கை

September 19, 2017 தண்டோரா குழு

பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று அவரது தயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் , கடந்த 26 ஆண்டுகளாகச் சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்று, அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் அவரது தந்தை ஞானசேகரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார்.

இதனையடுத்து, பேரறிவாளனை ஒருமாதம் பரோலில் விடுவிக்க, தமிழக அரசு கடந்த 24-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், பரோல் காலம் முடிய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி, சட்ட அமைச்சர் சி.வி சண்முகத்தைச் சந்தித்து அற்புதம்மாள் மனு அளித்துள்ளார்.

மேலும் படிக்க