• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

September 19, 2017 தண்டோரா குழு

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(செப் 19) மேல்முறையீடு செய்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.இதனைத்தொடர்ந்து, எம்எல்ஏகளிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.இந்த நோட்டீசுக்கு செப்டம்பர் 5-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் 7-ந் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் மட்டும் நேரில் ஆஜரானார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.இதனைத் தொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால், நேற்று(செப் 18) உத்தரவிட்டார்.

சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.இந்த வழக்கு மீதான விசாரணை, நாளை திமுக தொடர்ந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. இம்மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.

மேலும் படிக்க