• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு

September 19, 2017 தண்டோரா குழு

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(செப் 19) மேல்முறையீடு செய்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.இதனைத்தொடர்ந்து, எம்எல்ஏகளிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.இந்த நோட்டீசுக்கு செப்டம்பர் 5-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் 7-ந் தேதியன்று நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் மட்டும் நேரில் ஆஜரானார். மற்றவர்கள் ஆஜராகவில்லை.இதனைத் தொடர்ந்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால், நேற்று(செப் 18) உத்தரவிட்டார்.

சபாநாயகரின் இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.இந்த வழக்கு மீதான விசாரணை, நாளை திமுக தொடர்ந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. இம்மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 20-ம் தேதி நடைபெறுகிறது.

மேலும் படிக்க