• Download mobile app
04 Jul 2025, FridayEdition - 3432
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்க மாணவிகள் மீது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஆசிட் வீச்சு

September 18, 2017 தண்டோரா குழு

வாஷிங்டன்

அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா மேற்கொண்ட நான்கு கல்லூரி மாணவிகள் மீது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா பாஸ்டன் கல்லூரியை சேர்ந்த நான்கு பெண்கள் பிரான்ஸ் நாட்டிற்கு கடந்த ஞாயிற்றுகிழமை சுற்றுலா சென்றனர். தெற்கு பிரான்ஸின் மெர்சிலி ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண், தான் வைத்திருந்த ஆசிடை அந்த நான்கு பேர் மீது வீசியுள்ளார்.

இதில், இரண்டு மாணவிகள் முகத்தில் ஆசிட் பட்டது மற்ற இரண்டு மாணவிகள் முகத்தில் ஆசிட் படவில்லை. ஆனால், அவர்கள் உடல் பகுதியில் ஆசிட் பட்டது. அந்த நான்கு பேரையும், ரயில்வே காவல்துறையினர் மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனிடையே, அந்த மாணவிகள் மீது ஆசிட் வீசிய 41 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிய வந்துள்ளது. அந்த மாணவிகள் மீது ஏன் அவர் ஆசிட் வீசினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க