• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜோதிகாவை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் இளம் நடிகை !

September 8, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் மணிரத்னம், கௌதம் மேனன் என சில இயக்குனர்கள் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.சிலருக்கு அது கனவாகவும் இருக்கும்.

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்தப்படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார். தற்போது அப்படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்யும் வேளையில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையில், அண்மையில் தான் மணிரத்னம் படத்தில் தான் நடிக்க இருப்பதாக நடிகை ஜோதிகா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்தநிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.ஜோதிகா, ஐஸ்வர்யா இருவரும் ஒரே படத்தில் நடிக்கிறார்களா அல்லது வெவ்வேறு மணிரத்னம் படத்தில் நடிக்கிறார்களாக என்ற எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் படிக்க