• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துல்கர் சல்மானின் நான்கு அவதாரங்கள்

September 8, 2017 தண்டோரா குழு

மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனும் மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோக்களுள் ஒருவராகவும் இருந்து வருகிறார் துல்கர் சல்மான்.

இவர் தற்போது பிஜாய் நம்பியார் இயக்கத்தில் ‘சோலோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழியிலும் தயாராகி வருகிறது.

இப்படத்தின் கதை நீர், நெருப்பு, காற்று, நிலம் என இயற்கையை உணர்த்து விதமாக இருப்பதோடு இதில் துல்கர் நான்கு சிவ அவதாரங்களில் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சேகர், திரிலோக், ருத்ரா, சிவா ஆகிய நான்கு அவதாரம் பற்றியும், சிவ தத்துவத்தை பற்றியும் கூறப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு சிவ தாண்டவத்தை கொண்டு தீம் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இரண்டு காதல் கதைகள், இரண்டு போராட்ட கதைகள் என இப்படத்தில் பல அம்சங்கள் நிறைந்துள்ளது. இதனால் துல்கர் சல்மான் ரசிகர்கள் இப்படத்தினை எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க