• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

10 நிமிடத்தில் சிவகார்த்திகேயன் செய்த விஷயம் – நயன்தாரா கூறும் ரகசியம் !

August 31, 2017 தண்டோரா குழு

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா முதல் முறையாக ஜோடியாக நடித்து வரும் படம் ‘வேலைக்காரன்’.

இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் இப்படம் குறித்தும் சிவகார்த்திகேயன் குறித்தும் நயன்தாரா பேட்டியளித்துள்ளார்.

அதில், “படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் மிகவும் அமைதியாக இருப்பார். படத்தில் வசனங்கள் பல பக்கங்கள் இருக்கும். ஒரு நாள் இரவு 1-2 மணி இருக்கும் போது அவருக்கு பல பக்கங்கள் கொண்ட வசனங்கள் கொடுத்தார்கள். அப்போது அவர் 10 நிமிடம் கொடுக்க முடியுமா என்று கேட்டு படித்துவிட்டு உடனே வந்து நடித்தும் முடித்து விட்டார். சத்தியமாக 10 நிமிடத்தில் அவ்வளவு பெரிய வசனங்களை பேசவே முடியாது. ஆனால் அவர் முடித்து விட்டார். அவர் மிகவும் திறமையானவர்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க