• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘விவேகம்’ கதை என்னுடையது : உரிமை கொண்டாடிய இயக்குனர்!

August 29, 2017 tamilsamayam.com

‘விவேகம்’ படத்தின் கதை என்னுடைய என்று தயாரிப்பாளரும், இயக்குனருமான ரவீந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத் நடிப்பில் உருவான ‘விவேகம்’ தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை என்னுடையது என தயாரிப்பாளரும், இயக்குனருமான ரவீந்தர் என்பவர் தற்போது கூறி வருகிறார்.

இயக்குனர் ரவீந்தர் தன் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: “அஜீத்திற்கு நெருங்கிய உதவியாளர் ஒருவரிடம் கதையை கூறினேன்.ஆனால் அறிமுக இயக்குனருடன் அவர் பணியாற்றமாட்டார் என கூறி அவரை அஜீத் சந்திக்க அனுமதிக்கவில்லை. தற்போது ‘விவேகம்’ படம் பார்க்கும்போது 60 சதவிகிதத்திற்கு மேல் என் கதையை பயன்படுத்தியது தெரியவந்தது.

இந்த கதையை ‘மி-நா’ என்ற பெயரில் படமாக எடுக்க நினைத்திருந்தேன். “நான் பணத்திற்காகவோ, விளம்பரத்திற்காகவோ இதை கூறவில்லை. என் கதையை அவர்கள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டாலே போதும்“ என்கிறார் இயக்குனர் ரவீந்தர்.

மேலும் படிக்க