• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘விவேகம்’ கதை என்னுடையது : உரிமை கொண்டாடிய இயக்குனர்!

August 29, 2017 tamilsamayam.com

‘விவேகம்’ படத்தின் கதை என்னுடைய என்று தயாரிப்பாளரும், இயக்குனருமான ரவீந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜீத் நடிப்பில் உருவான ‘விவேகம்’ தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை என்னுடையது என தயாரிப்பாளரும், இயக்குனருமான ரவீந்தர் என்பவர் தற்போது கூறி வருகிறார்.

இயக்குனர் ரவீந்தர் தன் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: “அஜீத்திற்கு நெருங்கிய உதவியாளர் ஒருவரிடம் கதையை கூறினேன்.ஆனால் அறிமுக இயக்குனருடன் அவர் பணியாற்றமாட்டார் என கூறி அவரை அஜீத் சந்திக்க அனுமதிக்கவில்லை. தற்போது ‘விவேகம்’ படம் பார்க்கும்போது 60 சதவிகிதத்திற்கு மேல் என் கதையை பயன்படுத்தியது தெரியவந்தது.

இந்த கதையை ‘மி-நா’ என்ற பெயரில் படமாக எடுக்க நினைத்திருந்தேன். “நான் பணத்திற்காகவோ, விளம்பரத்திற்காகவோ இதை கூறவில்லை. என் கதையை அவர்கள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டாலே போதும்“ என்கிறார் இயக்குனர் ரவீந்தர்.

மேலும் படிக்க