• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எலியால் 9 மணி நேரம் தாமதமாக கிளம்பிய விமானம்

August 28, 2017 தண்டோரா குழு

புதுதில்லியிலிருந்து அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்யவிருந்த எர் இந்தியா விமானத்தில் எலியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

புதுதில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்திலிருந்து அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ நகருக்கு பயணம் செய்ய Boeing 777 நேரடி விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் எலி ஒன்று அங்கும் இங்கும் ஓடுவதை பயணிகள் கவனித்து, விமான ஊழியர்களுக்கு தகவல் தந்தனர்.

உடனே விமானத்தின் பொருளாதார வகுப்பிலிருந்த 172 பயணிகளும், வணிக வகுப்பில் பயணித்த 34பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டனர். விமானத்திலிருந்த எலியை நச்சு வாயு மூலம் அழிக்க சுமார் 6 நேரம் ஆகியது.

இதனால் விடியற்காலை சுமார் 2௦ மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 9 நேரம் தாமதமாக கிளம்பியது.

விமானம் அவ்வளவு தாமதமாக கிளம்பியது, பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

“கேட்டரிங் வாகனங்கள் மூலம் தான், எலிகள் விமானத்திற்குள் நுழைகின்றன. அவைகளை நச்சு வாயு மூலம் அழிக்காவிட்டால், விமானத்திலிருக்கும் மின்சார கம்பிகளை கடித்துவிடும், இதனால் விமானத்தை இயக்கும்போது, கட்டுபாட்டை இழந்துவிடும்” என்று இந்திராகாந்தி சர்வதேச விமானநிலைய அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க