• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ப்ளூசட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – லாரன்ஸ்

August 26, 2017 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க உருவாகி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான படம் விவேகம். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான விவேகம் படத்தை பற்றி பல்வேறு வகையில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,இணையதளத்தில் சிலர் தனிப்பட்ட முறையில் இப்படத்தைப்பற்றியும், அஜீத்தை பற்றியும் விமர்சனம் செய்தது சினிமா துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திரைத்துறையினர் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கோலிசோடா உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மில்டன், விவேகம் படம் பற்றி தரக்குறைவாகவும், தனிப்பட்ட முறையிலும் விமர்சனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். அதைபோல் நடிகர் இயக்குனரும் நடிகருமான ராகவா லன்ரான்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், ‘நான் விவேகம் படம் பார்த்தேன். அஜீத்தின் கடின உழைப்பிற்கு தலைவணங்குகிறேன். படம் பற்றி நல்லவிதமான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ப்ளூசட்டை மாறன் என்பவர் மோசமாகவும், மனதில் வலியை ஏற்படுத்தும் வகையிலும் விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.
விவேகம் படத்தில் பல காட்சிகள் பிரம்மாண்டமாக, ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கியுள்ளனர். படக்குழுவினரின் உழைப்பை விமர்சனம் என்கிற பெயரில் சில வார்த்தைகளில் கொச்சைப்படுத்தி விடக்கூடாது. அவரது விமர்சனம் அஜித்தையும் , அவரது ரசிகர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆகையால் சினிமாவையும், சினிமாதுறையினரையும் இழிவுபடுத்தும் ப்ளூசட்டை மாறன் மீது தயவு செய்து சினிமா துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க