• Download mobile app
08 Dec 2025, MondayEdition - 3589
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய்க்கு நோ சொன்ன ரஜினி, மகேஷ்பாபுக்கு ஓகே ஏன் சொன்னார் தெரியுமா?

August 19, 2017 tamilsamayam.com

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினி கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு நோ:

விஜய்யின் ‘மெர்சல்’ ஆடியோ வெளியீடு வரும் 20ம் தேதி நடைப்பெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விழாவுக்கு வர முடியாது என ரஜினி கூறிவிட்டதாக தெரிகிறது. அதே போல கமலும் வரவில்லை என கூறப்படுகிறது.

மகேஷ் பாபுவுக்கு ஓகே :

விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என கூறிய ரஜினி, மகேஷ் பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ இசை வெளியீட்டு விழாவுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

இதற்கு, மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா மீது பெரும் மரியாதை வைத்துள்ளதாகவும், அவர் தமிழில் சிவாஜி போன்ற உயர்ந்த நடிகர் என்பவரால், அவர் மீதான மரியாதை காரணமாக ‘ஸ்பைடர்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

இதனால் மகேஷ் பாபுவின் தமிழ் எண்ட்ரிக்கு வரவேற்பு கிடைத்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க