• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாங்க நிச்சயம் இந்தியாவுக்கு திருப்பி கொடுப்போம்: தரங்கா!

August 18, 2017 tamilsamayam.com

டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்வியை ஒருநாள் தொடரின் வெற்றி மூலம் மீட்போம் என இலங்கை அணி கேப்டன் உபுல் தரங்கா தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், டி-20 போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்தது போல தோனி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததற்கு, ஒருநாள் தொடரில் நிச்சயமாக பழிதீர்ப்போம் என இலங்கை அணி கேப்டன் உபுல் தரங்கா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தரங்கா கூறுகையில்,

ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை மிகவும் பலமான அணி. அதனால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான தகுதியும், திறமையும் இலங்கை வீரர்களிடம் உள்ளது. எங்களால் முடிந்த அளவு கடினமாக பாடுபடுவோம். அதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை. என்றார்.

மேலும் படிக்க