• Download mobile app
31 Jan 2026, SaturdayEdition - 3643
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய கொடியை பறக்க விட்ட குரங்குகள்!

August 17, 2017 தண்டோரா குழு

ராஜஸ்தானிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில், குரங்குகள் தேசிய கொடியை ஏற்றிய வினோத சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் புஷ்கர் நகரிலுள்ள பிரக்யா பால் நிகேதன் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.பள்ளியின் அறக்கட்டளை தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். அவருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த 2 குரங்குகள், கம்பத்தில் கட்டியிருந்த தேசியக் கொடியை பறக்கவிட்டன.

இந்நிலையில் திடீரென பள்ளிக்கு வந்த இரண்டு குரங்குகள், கொடிக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை நோக்கி வேகமாக வந்தன. கொடி கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கொடியின் கயிற்றை இழுத்து, கொடியை ஏற்றின. கொடியும் அழகுடன் பறந்தது.இதை சிறிதும் எதிர்பார்க்காத அந்த பள்ளி நிர்வாகம், செய்வது அறியாது நின்றது. இதைப் பார்த்த பள்ளி மாணவ மாணவியர் தங்கள் கரங்களை தட்டி, சிரித்து மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியை பள்ளியின் இருந்த ஒருவர் காணொளியாக எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டார். அது வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க