• Download mobile app
03 May 2026, SundayEdition - 3735
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெங்களூருவில் மழை தொடரும்

August 16, 2017 தண்டோரா குழு

பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பெங்களூரில் விடிய விடிய கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகளிலும் மழைநீர் உள்ளே புகுந்தது. வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பெங்களூர் பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கன மழை அடுத்த 3 நாள்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கனமழையின் காரணமாக பாதிப்பு ஏதும் வாராமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினர் தாயார் நிலையில் உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க