• Download mobile app
23 Feb 2026, MondayEdition - 3666
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரோஜர்ஸ் கோப்பை: போராடித் தோற்றது போபண்ணா இணை

August 16, 2017 tamilsamayam.com

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – குரோஷியாவின் இவான் டோடிக் இணை போராடித் தோற்றது.

டொரணன்டோவில் நடக்கும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின்ன் ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் குரோஷியாவின் இவான் டோடிக் இணை, அமெரிக்காவின் ராஜீவ் ராம் மற்றும் தென்னாப்ரிக்காவின் ரேவன் கிளாசன் இணையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரான்சின் ஹியூக்ஸ் ஹெர்பெர்ட் மற்றும் நிக்கோலஸ் மகுட் இணைக்கு எதிராக களமிறங்கியது போபண்ணா – டோடிக் இணை. இப்போட்டியில், கடுமையாகப் போராடிய போபண்ணா இணை முதல் செட்டை 4-6 என இழந்தது. பின்னர் சுதாரித்து ஆடி 6-3 என இரண்டாவது செட்டை வசப்படுத்தியது. அடுத்து நடந்த டை பிரேக்கர் செட்டில் 6-10 என தோல்வியடைந்து ஏமாற்றியது.

இதனால், 4-6, 6-3, 6-10 என்ற செட்களில் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

மேலும் படிக்க