• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜோர்டான் நாட்டின் விலங்கு அருங்காட்சியகத்தில் பிறந்த சிங்கக்குட்டி

August 15, 2017 தண்டோரா குழு

ஜோர்டான் நாட்டின் விலங்கு அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பெண் சிங்கம் அழகிய குட்டியை ஈன்றுள்ளது.

சிரியா நாட்டில் நடந்து வரும் உள்நாட்டு போரால், பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பலர் அகதிகளாக வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டனர். அல்லேப்போ நகர் முழுவதும் தரைமட்டம் ஆக்கபட்டது. அல்லேப்போ நகரிலிருந்த விலங்கு அருங்காட்சியகத்திலிருந்த விலங்குகள் அனாதைகளாக விடப்பட்டது.

இதை அறிந்த Four Paws என்னும் விலங்குகள் மீட்பு அமைப்பு, அந்த விலங்குகளை விடுவிக்க முன் வந்தனர். அதன்படி, அங்கிருந்த விலங்குகளை சிரியாவிலிருந்து 375 மைல் தூரத்திலுள்ள வட ஜோர்டான் நாட்டிலுள்ள ‘ஆள் மாவா’ என்னும் இயற்கை மற்றும் வன சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கொண்டு செல்லப்பட்ட ‘டாணா’ என்னும் பெண் சிங்கம் ஒன்று அழகிய குட்டியை ஈன்றுள்ளது.

‘பெண் சிங்கங்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கும்போது, பிறந்த குட்டியை கொன்றுவிடும் சுபாவம் உடையது. அதேபோல், 375 மைல் தூரம் பயணம் செய்த பிறகு, ஒரு புதிய இடத்தில் குட்டியை ஈன்ற மன அழுத்தத்தால், பிறந்த குட்டியை கொன்று விடுமோ என்று கவலை அடைந்தோம்.

ஆனால், பிறந்த குட்டியை அன்போடு கவனித்துக்கொண்டது.மேலும் டாணாவிற்கு நடத்திய Ultrasound scan னில் இரண்டு குட்டிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. மற்றொரு குட்டியின் பிறப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க